முத்தமிழான இயல்,இசை, நாடகப்பெருங்கலைக்கு தங்கள் அயராத திருப்பணியால் ஆக்கம் பல சேர்த்து நூற்றாண்டு கடந்து ஆலம் விழுது போல் கலைஞர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இயல்,இசை,நாடக ஜாம்பவான்கள் காட்டிய நல் வழியை பின்பற்றி முத்தமிழ் கலையை வளர்த்து வரும் தமிழ்நாடு கலைஞர்களின், வாழ்வாதாரத்தை உயர்த்தவே “தமிழ்நாடு கலைஞர்கள்கலைக்களஞ்சியம்”உருவாக்கப்பட்டுள்ளது. மாணிக்க மொழிச்சொல்லால்,மான்புயரும் உணர்ச்சியால், தேனருவி இசையின் தித்திப்பால் மானிடரின் உள்ளத்தை மகிழ்விக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், கலை உலகத்தினரும், கொடையுள்ளம்கொண்ட அறக்கட்டளை அன்பர்களும் தமிழ்நாடு கலைஞர்களின் வாழ்வுயர, இவ்வலைதளத்தில் இடம்பெற்றுள்ள முத்தமிழ் கலைஞர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பணிவாய்ப்பளிக்கவும்,கொடை தந்தருளவும் வேண்டுகிறோம்.
மேலும் கல்விச் சேவையிலும் நேரடியாக பங்களிக்க வேண்டுகிறோம்.